தமிழ்ப் புத்தாண்டாம் தைப் பொங்கலை அனைவரும் கொண்டாடுவோம் என்னும் தொனிப்பொருளில், பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கு அகரம் நலன்புரிச் சங்கத்தினரால் இந்த பொங்கள் பொருட்கள் வழங்கப்பட்டன.
தைப்பொங்கல் தமிழர் புத்தாண்டில் அனைவரது இல்லத்திலும் பொங்கலிடவேண்டும் என்ற இலக்குடன் வடமராட்சி கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட அறுபது குடும்பங்களுக்கு குறித்த பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்படன.
இந் நிகழ்வில் மருதங்கேணி பிரதேச செயலக அலுவலர்கள் மற்றும் குடத்தனை வடக்கு கிராம சேவகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.